பார்த்தேன் உன்னை மறந்தேன் என்னை
பெப்ரவரி24, 2011
hellokathaliye
குறிச்சொற்கள்: அட்வென்ச்சர், அப்பா, விருப்பம்
ரொம்ப நாளைக்கு அப்பறம் மனசில இருக்கத உன்கிட்ட சொல்ல வரேன். சரி உன்னை பார்த்துட்டு போனேன் ஒரு பதிலையும் காணோமேனு பாக்குறியா? உன்னை பிடிச்சிருக்கு, எனக்கு இந்த பொண்ணைதான் கல்யாணம் பண்ணி வைக்கனும் அப்படினு எங்கப்பாகிட்ட சொல்ற அளவுக்கு இன்னும் வரல. பொறுமையா இருக்கேன். உனக்கு என் கம்பெனில வேலை வாங்குற அளவுக்கு நான் ரெடி. இத எங்கப்பாகிட்டயும் சொல்லியாச்சு. இப்படிதான் என் விருப்பம் என்னனு என்னால சொல்ல முடியும். எனக்கு உன்னை மறுபடியும் பாக்கனும். உன் வாயால என்னை பிடிச்சிருக்குனு ஒரு வார்த்தை சொல்லனும். அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும். எங்கப்பாவ பத்தி சொல்லனும்னா அவரு ஒரு அட்வன்ச்சர் ப்ரியர் ( என்னை மாதிரி). எதுவா இருந்தாலும் லாஸ்ட் மினிட் தான். உன்னை பாக்க வரும்போது கூட எனக்கு தெரியாது நான் எங்க வரேனு. அப்பா அம்மா புள்ளைனு ஒன்னும் இல்லை. ஆனா எப்படி போய் எங்க அப்பா, அம்மாகிட்ட பேசுறது உன்னை பத்தி…மறைமுகமா சொல்லியாச்சு… பொண்ணுக்கு பிடிச்சிருந்தா எனக்கு ஓகேனு. இதுக்கு மேல எப்படி ஓபனா பேசுறதுனு எனக்கு தெரியல. எனக்கு ஒன்னு மட்டும் தான் தெரியும், நான் உன்னை பாக்கனும் மறுபடியும்.
Entry Filed under: உணர்ச்சிகள்
மறுமொழி இடுக
Trackback this post | Subscribe to comments via RSS Feed